Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

குறிச்சொற்கள்: அரசுஇயல்


வலைப்பதிவுகள் (2)
பெனாசிரின் படுகொலை ஜனநாயக முயற்சிகளுக்கு விழுந்த பேரிடியாக கருதப்படுகிறது. ராணுவ ஆட்சியாளர்களின் தற்குறித்தனமான, அடக்குமுறை ஆட்சியாலும், மத அடிப்படைவாதிகள், மதக் கொள்கையை அடிப்படையாக்க் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்களின் மாற்றத்தை நோக்கிய அரசியல் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், அடையாளமாகவும் பெனாசிர் திகழ்ந்தார். எனவேதான் அவரது படுகொலை அந்நாட்டில் மட்டுமின்றி, அண்டை- அயல் நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க…

மலேசியா விடுதலை பெற்று அரை நூற்றாண்டுக் காலம் ஆகியும் அந்நாட்டின் பொருளாதார வளத்திற்காக பெரும்பங்காற்றிய இந்திய வம்சாவழியினர் எல்லாத் துறைகளிலும் ஓரங்கட்டப்படுவது மட்டுமின்றி, அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது என்று மலேசிய இந்தியத் தலைவர் வேதமூர்த்தி கூறினார்! மேலும் படிக்க…