பெனாசிரின் படுகொலை ஜனநாயக முயற்சிகளுக்கு விழுந்த பேரிடியாக கருதப்படுகிறது. ராணுவ ஆட்சியாளர்களின் தற்குறித்தனமான, அடக்குமுறை ஆட்சியாலும், மத அடிப்படைவாதிகள், மதக் கொள்கையை அடிப்படையாக்க் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்களின் மாற்றத்தை நோக்கிய அரசியல் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், அடையாளமாகவும் பெனாசிர் திகழ்ந்தார். எனவேதான் அவரது படுகொலை அந்நாட்டில் மட்டுமின்றி, அண்டை- அயல் நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க…