சமூகவியலில் ஆர்வம் கொண்ட சராசரி பத்திரிக்கையாளன். இருப்பது எதையும் ஏற்பது இல்லை. ஏற்படுத்தப்படும் எதையும் கேள்விக்கு உட்படுத்துவதுதான் இயல்பு. எல்லோரும் மகிழும் ஓர் இனிய புது உலகம் படைக்கவேண்டும் என்பதே ஆசை. ஆசைகளுக்குப் பின் செல்லும் உலகமிது. இன்பம் என்று ஒவ்வொன்றையும் நாடி துன்பத்தில் சிக்கி உழன்றுகொண்டிருக்கிறது. போட்டியையும், பொறாமையையும் நியாயப்படுத்த போராடிக்கொண்டிருக்கிறது. எதிரில் உள்ள மனிதனை தன்னையொத்த ஜீவன் என்று கருதாமல், போட்டியாளனாக, எதிரியாக நினைத்து மாய்ந்து, மாய்ந்து போராடுகிறது. வாழ்வின் அர்த்தத்தை அறிவதைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் நாடி ஓடி, ஓடி களைத்து, இறுதியில் உடலோடும், உயிரோடும் போராடி மாண்டு போகிறது. இந்த பாதையை மறுக்கிறது என் நெஞ்சம். வேறொரு பாதை... வேறொறு உலகம் கட்டாயம் அவசியம் என்று ஏங்குகிறது. எனது இந்த உலகத்தில் தற்பொழுது நிலவும் புகைச்சல்களைத் தான் பதித்து நிரப்பியுள்ளேன். இதுவல்ல நான் (நாம்) நாடும் உலகம். வேறொன்று... அதை நோக்கி... ஒரு நிச்சயமான பாதையில் செல்லத் துடிக்கிறேன். இயன்றவரை அடையாளம் காட்டுவேன்.
| வாசலை உருவாக்கியவர் | Mr. KAyyanathan |
| கடைசியாக மாற்றப்பட்டது | நவம்பர் 14, 2008 12:19:39 PM IST |