Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

11/5/08 12:21 PM

கிழி இருளை ஒளி நிச்சயம்!

இருளை விரும்புவதில்லை இதயம்
நள்ளிரவிற்குப் பின் பிறக்கும் காரிருள்
தனிமையை அச்சமூட்டும் கருமையது
அதனின்று நம்மை காத்துவிடுகிறது தூக்கம்

விடியல் அழகானது அற்புதமானது
மிரண்டிருக்கும் போலிகளின் முகத்திரை கிழப்பதது
உலகை விழிக்கச்செய்து உறவை புதுப்பிப்பது
இயங்க சக்திதந்து இன்பத்தை துகரச்செய்கிறது

மானுட வாழ்வில் அன்றாடம்
இயற்கை தரும் இந்த மாறா அதிசயத்தை ஈழத்
தமிழ் இனத்திற்கு மறுக்கிறதே உலகம்
துயரில் மூழ்கடித்து மூச்சிரைக்க வைக்கிறதே

அவனுக்கு வேண்டுவது நமக்கும் தேவைதானே
உணவும் உடையும் உறையுளும் போல்
பசியும் உறக்கமும் பாசமும் போல்
சுதந்திர வாழ்வும் உரிமையும் பொதுமைதானே

உணர்ந்தும் அதனை மறுக்கிறதே உலகம்
மனதிருந்தும் மறுக்கிறதே வாழ்வுரிமையை
நாட்டில் வாழ்வோர் காட்டில் நிற்கின்றனர்
பள்ளிக் குழந்தைகள் பரிதவித்துத் துடிக்கின்றன

வாயும் வயிறும் காய்கிறது மழைக்காட்டில்
வாழ வழியின்றி தவிக்கிறது ஈழத்தமிழினம்
இறையாண்மை பேசுகிறது மைய அரசு எம்மை
ஒடுக்குபவனுக்கு ஒத்தடம் கொடுக்கிறது

அரசியல் தர்மம் நியாயம் எல்லாம்
உதைபடுகிற தமிழனுக்கு இல்லையென்று
அவன் உழைப்பைத் தின்று வளர்ந்த
வெள்ளைச் சட்டைகள் குழிபறிக்கின்றன

முப்பதாண்டுக் காலமாக அடிக்கின்றான்
என்னடா உன் நியாயம் என்று எவனும் கேட்கவில்லை
திருப்பி அடித்துக் காத்தவனை பயங்கரவாதியென்கிறது
கு்ண்டு போட்டுக் கொல்பவனை பெளத்தன் என்கிறது

அடிப்பவனிடம் கிட்டாது அரசியல் நியாயம்
திருப்பி அடித்து பிடிங்கிக் காட்டவேண்டும்
இது அடிப்பவனை ஆராதிக்கும் உலகம்
விடியட்டும் என்று காத்திருத்தல் வீண்

கிழித்துக்கொண்டு இருளை மாய்க்கும் ஒளியென
நியாயத்தை ஆயுதத்தால் பெறுவதே ஒரே வழி
நம்மை அடிப்பவன் பெளத்தனுமல்ல
நியாயம் பேசுபவன் காந்தியவாதியுமல்ல

வலித்தவன் வைத்துதான் இன்றும் சட்டம்
பேச்சால் பிறக்காது நியாயமும் தீர்வும்
பலமாக அடி ஒவ்வொரு அடியிலும் வெற்றிதான்
கிழி இரவை ஒளி பிறக்கும் பார்.

மறுமொழிகள்

Re: 11/5/08 12:21 PM
supeeeeeeeeeeeeeeeeeer "eelam.mywebdunia.com"
கைதுறப்பு