எருதின் புண் காக்கை அறியாது
வயிராறப் புசித்துப் பறந்துவிடுகிறது
வலித்தாலும் எருது செத்து விடவில்லை
கன்றுக்குட்டிக்குச் சுறக்கும் பாலை
அதற்குத் தீவனம் தந்தவன் கறந்தாலும்
கன்றும் வளர்கிறது பசுவும் வாழ்கிறது
ஆடு மாடு கோழிகளை வளர்த்தவன்
விற்று அவை இரையாகிப் போனாலும்
அவ்வினங்கள் அழியவில்லை வாழ்கின்றன
விவசாயி விளைக்கும் பயிர்த் தானியங்களை
பறவைகளும் எலிகளும் நரிகளும் புசித்தாலும்
அந்தக் குறைவால் விவசாயி மடிவதில்லை
ஆளும் இனமொன்றின் அசிங்க அரசு
அண்டை மண்ணில் குவிக்கிறது கொன்று
தமிழ் பேசும் மக்களை கால் நூற்றாண்டாக
பெளத்தப் பரம்பரையினர் நாங்கள் என்று
ரத்தம் தோய்ந்த நாக்குடன் பிதற்றுகிறது
ஆயுதத்திற்காக அலையும் ஓநாய் கூட்டம்
அதனையும் அரவணைக்க சில தேசங்கள்
தன் இனத்தை வீரத்தால் தியாகத்தால்
காக்கும் படை பயங்கரவாதிகளாம் – செப்புகிறது
அடிபட்டக் காயத்தை நக்கியும் ஆறாமல்
புண்ணிற்குப் புனகு தேடும் ஓநாய் கூட்டம்
உயிருக்காக உடல் போராடும் வேளையிலே
தின்பதற்குக் காத்திருக்கும் கழுகுக் கூட்டம்போல
குண்டு வீசி அழித்த தமிழர் ரத்தத்தை
சுகிக்கும் இந்த ஓநாய்களுக்கும் தோழர்களாம்
இங்கு பேடிகள் நடத்தும் பத்திரிக்கைகள் சில
அந்த ஓநாய்களுக்கு வெஞ்சாமரம் வீசுகின்றன
தமிழனின் காசில் வாழும் இந்த சிறு
நரிக்கூட்டம் அவன் வீழ்ச்சிக்கு ஏங்குகிறது
அவன் வீழந்தால் முடிந்தது கதையென்கிறது
உடைந்து சிதறிவிடுமாம் புலிக் கூட்டம்
கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கிறது
புலியின் பதுங்கல் எதற்கென்று புரியாமல்
தமிழரின் வாழ்வில் பதுங்கலும் பாய்தலும்
பரவிக் கிடக்கின்றன வரலாற்றில் எங்கும்
வீழ்வதுபோல் காட்டி எழுந்தழித்த இனமிது
எதிர்போர் அனைவரையும் வீழ்த்தி வெல்லும்
விடுதலை மானுடத்தின் இடையறா உயிர்மூச்சு
அதுவன்றி வாழத் தெரியாதது தமிழர் கூட்டம்
எங்கள் நோக்கு நேரானது நியாயமானது
வீழாது புலிப்படை வென்றே தீரும் விடுதலையை!

நினைவேறுகிறது…